25 688e11fb14f86
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கை பொலிஸ் திணைக்களம் Sri Lanka Police eTraffic App ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை பொதுமக்களில் 13000 பேர் இந்த Sri Lanka Police eTraffic Appயை தரவிறக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களில் அதிகளவான பொது மக்கள் மரணிப்பது அதிகரித்துள்ளது.

பொதுவாக கொழும்புக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களில் மரணிப்போரின் வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அதிக வேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படுகிறது.

ஆகையால் அனைவரும் குறித்த Appயை தரவிறக்கம் செய்து நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது அல்லது வாகனத்தில், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அதிக வேகமாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் அல்லது சாரதிகளின் காணொளி, புகைப்படம் ஒன்றை எடுத்து இந்த Appயில் தரவேற்றம் செய்தால் பொலிஸ் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...