23 653a1a1a78b85
இலங்கைசெய்திகள்

யாழில் CID அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு – உண்மைகளை கண்டுபிடிக்க தடங்கல்

Share

கடற்படை குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரிக்க சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை விசாரிக்க பருத்தித்துறைக்கு விசாரணை அதிகாரிகள் சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரால் அவர்களை பின்தொடர்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...