VideoCapture 20211106 221732
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிணற்றில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!!

Share

வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த மாணவன் (பிரபாகரன் ரஜீவன் – வயது 18) ஒருவன் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் சிரமதானம் செய்வதற்கு நண்பர்களுடன் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறித்த மாணவன், சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் நீந்துவதற்கு சென்றிருந்தார்.

நண்பர்களுடன் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவர் கிணற்றில் மூழ்கியதை அவதானித்த அவரது நண்பர்கள், அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மாணவன் மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார்.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...