3 8
இலங்கைசெய்திகள்

வேலைக்குச் சென்ற பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த மர்ம நபர்! அதிகாலையில் நேர்ந்த பரிதாபம்

Share

கொஸ்கம பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த படுகொலையை செய்த கொலையாளி தொடர்பில் தகவல்கள் எதும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவிஸ்ஸாவெல்ல – புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் ரப்பர் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும், இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...