25 684a8da019cfb 1
இலங்கைசெய்திகள்

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள்: பாதிக்கப்படும் மக்கள்!

Share

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசு கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஆதவன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12) நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த பகுதியானது வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருந்தாலும் சங்கானை, அராலி போன்ற பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. அந்த சூழலை அண்டியுள்ள மக்களின் சுவாசத்துக்கு அது பிரச்சினையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவருமான சிறீ பவானந்தராஜா பதிலளிக்கையில், மாநகர சபையினர் தான் இந்த வேலைகளை செய்கின்றனர். கழிவகற்றல் என்பது ஒரு பாரிய பிரச்சினையாகத் தான் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...