25 684578d12b30a Recovered Recovered
இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு தொடரும் சிக்கல் – மோசடியான முறையில் விடுதலையான பலர்

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் ஆபத்தான கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில சிறைச்சாலைகளின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசடி நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மன்னிப்பை பயன்படுத்தி அனுராதபுரத்தை சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபர் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...