25 68459db5d1db3
இலங்கைசெய்திகள்

ஒரே நாளில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்!

Share

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால், நேற்று சனிக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 438 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, 155 கிராம் 448 மில்லி கிராம் ஹெரோயினுடன் 127 சந்தேகநபர்களும், 499 கிராம் 526 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 158 சந்தேகநபர்களும், 3.5 கிலோகிராம் கஞ்சாவுடன் 135 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1.1378 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் 06 சந்தேக நபர்களும், 157 போதைமாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொலிஸாரின் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...