ruwan wijewardene
செய்திகள்அரசியல்இலங்கை

கட்சிக்காக தியாகம் செய்ய தயார்! – ருவான் விஜேவர்தன தெரிவிப்பு

Share

” கட்சியை பலப்படுத்தக்கூடிய ஒருவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு நான் தயார். கட்சிக்காக இந்த தியாகத்தை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.”- இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போதே ருவான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஐ.தே.கவிலுள்ள தமிழ் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சிக்காக தம்மை அர்ப்பணித்த நவீன், அர்ஜுன ரணதுங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். ருவானுக்கு சார்பான சிலருக்கே பதவி வழங்கப்படுகின்றது.” – என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே ருவான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை பலப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், தலைமைத்துவத்தை கைப்பற்றும் எண்ணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...