25 6838fd7061a94
இலங்கைசெய்திகள்

துசிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு! திரைக்கதை எழுதியவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Share

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ மற்றும் சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட ஆகியோர் பயணித்த ஜீப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கோப்புகளை திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மற்றும் அவர் பயணித்த வாடகை மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளரும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த விசாரணை தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி…

“ஜீப்பில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தாக்குதல் நடத்தச் சொன்னார்கள். நாங்கள் அப்படிச் செய்தோம். எனக்கு எந்தக் கோப்பும் பற்றி எதுவும் தெரியாது,” என்று தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகளை ஆய்வு செய்தபோதும், கோப்பு திருடப்பட்டது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், துபாயை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு பாதாள உலக குற்றவாளியால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்கசூட்டுக்கு காரணமான பாதாள உலகக் குற்றவாளியின் தந்தை ஒரு உள்ளூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர்.

அவர் நாட்டின் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நாடகமாகக் கருதப்படும் கோபிகடே என்ற தொலைக்காட்சி நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடும் ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் போன்றது. விரைவில் திரைக்கதை எழுதி இயக்கிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

துபாயில் உள்ள பாதாள குழு உறுப்பினரின் வழிகாட்டுதலின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வங்கிக் கணக்கில் 200,000 ரூபா வரவு வைக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...