UN Security Council
செய்திகள்உலகம்

நீங்குகிறதா வடகொரியா மீதான பொருளாதார தடை?

Share

வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை விலக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன.

வடகொரியா முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோது ஐ.நா. பாதுகாப்பு சபையில் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை பரிசோதித்தமையால் பொருளாதாரத் தடைகளை மேலும் விதிக்கப்பட்டன.

இதன் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க அந்த நாடு தனது எல்லைகளை மூடி வைத்திருப்பதால் உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது.

இதனால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இவ்வாறான நெருக்கடி நிலையில் இருந்து வடகொரியாவைக் காப்பாற்றும் விதமாக, வடகொரியா மீதான முக்கிய பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொருளாதார வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் கூட்டாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.

முக்கிய பொருளாதார தடைகள் விலக்கப்பட்டால், வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதி, வெளிநாட்டில் வேலை செய்யும் வடகொரிய நாட்டினர் தங்கள் வருவாயை வீட்டுக்கு அனுப்புவதற்கான தடை வரை அகலும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...