2 31
இலங்கைசெய்திகள்

நான் உயிருடன் இல்லாத காலத்திலும் இது நடக்க வேண்டும்: மகிந்தவின் எதிர்பார்ப்பு

Share

அனைத்து இலங்கையர்களின் தாயகமும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இருக்க வேண்டும் என்பதே தனது ஒரே பிரார்த்தனை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தான் உயிருடன் இல்லாத காலப்பகுதியிலும் இந்த நிலைமை நீடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இது குறித்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று தசாப்தங்களாக நீடித்த ஒரு கசப்பான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, வீரமிக்க போர் வீரர்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைத் தியாகம் செய்த நாடு இலங்கை.

நமது வீரமிக்க போர் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த அந்த மகத்தான, சுதந்திரமான தாய் நாட்டை நான் மண்டியிட்டு வணங்கினேன்.

இனிமேல், நான் உயிருடன் இல்லாவிட்டாலும், நம் தாய்நாடு ஒரே சிங்கக் கொடியின் நிழலின் கீழ் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கட்டும்! என்னுடைய ஒரே ஆசை அது தான் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...