அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளமை தற்போது சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பேசி கொண்டிருந்த ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய ட்ரம்ப், அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.