8 5
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள பலிகொடுக்கப்படும் அதிகாரிகள்! நாமல் விமர்சனம்

Share

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள அதிகாரிகள் பலிகொடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksha) விமர்சித்துள்ளார்.

கொழும்பு , தொட்டலங்க பிரதேசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கம் எந்தவொரு விடயத்தையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாத அரசாங்கமாகும். ஆனால் அவர்களின் தவறுகளையும் இயலாமையையும் மறைத்துக் கொள்ள அதிகாரிகள் மீது பழிபோடுகின்றனர்.

உண்மையில் இது கவலைக்குரிய விடயமாகும் என்றும் நாமல் ராஜபக்‌ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...