2 4
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது

Share

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏதேனும் ஓர் வகையில் போர் மூண்டால் அது இலங்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நடந்தாலும் அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரங்கில் போர் பலம் கொண்ட இரண்டு முக்கிய நாடுகளாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் கருத முடியும் எனவும் அந்த வகையில் ஒப்பீட்டால் இலங்கை ஒர் நெத்தலி போன்றதொரு சிறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு உட்கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதாகவும், இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் அதனால் இலங்கை மக்கள் இழப்பதற்கு விசேடமாக ஏதுவுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....