2 4
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது

Share

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏதேனும் ஓர் வகையில் போர் மூண்டால் அது இலங்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நடந்தாலும் அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரங்கில் போர் பலம் கொண்ட இரண்டு முக்கிய நாடுகளாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் கருத முடியும் எனவும் அந்த வகையில் ஒப்பீட்டால் இலங்கை ஒர் நெத்தலி போன்றதொரு சிறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு உட்கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதாகவும், இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் அதனால் இலங்கை மக்கள் இழப்பதற்கு விசேடமாக ஏதுவுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...