vikneshwaran
செய்திகள்இலங்கை

விரைவில் ஒளிக் கீற்றுக்கள் எம்மைப் பார்த்து சிரிக்கட்டும் – வாழ்த்து செய்தியில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

Share

தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாள் ஆகும். எமது இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளியேற்ற வேண்டி இத் திருநாளில் எனது தீபாவளி வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்வாறு தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வானில் பருவப்பெயர்ச்சியின் கரு மேகங்கள் மட்டுமன்றி அரசியல் வானிலும் கருமேகங்கள் சூழ்ந்து வருகின்றன. விரைவில் ஒளிக் கீற்றுக்கள் எம்மைப் பார்த்துச் சிரிக்க வேண்டி பிரார்த்திக்கின்றேன். இவ்வருட தீபாவளி இ ஒளியை அரசியல் வானிலும் கொண்டுவர வேண்டும்.

இத் தீபாவளித் தினத்தில் புதிய உடுபுடைவைகள் வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல், கோவில்களுக்கு கூட்டம் கூட்டமாகச் செல்லுதல், சுற்றத்தார் உறவினர் நண்பர்கள் வீடுகளிற்குச் செல்லுதல் ஆகிய வழக்கங்களை இம்முறை நாம் தவிர்த்து வீட்டில் இருந்து வழிபாடு செய்து குழந்தை குட்டிகளுடன் ஆனந்தமாக பொழுதைக் களிப்போமாக!

கொரோனா என்னும் கொடிய அரக்கன் தiலைவிரித்தாடுகின்ற இச் சந்தர்ப்பத்தில் நாம் சமூக இடைவெளிகளைப் பேணி வீட்டில் இருந்தவாறே இத் திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் எம்மையும் எமது குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் இரத்த உறவுகள், நண்பர்களையும் இத் தொற்றில் இருந்து பாதுகாக்க வழி வகுக்கலாம்.
எமது சிறார்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் பாடசாலைக்குச் சென்று தமது கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எனவே எமது தேவையற்ற ஒன்று கூடல்கள், களியாட்டங்கள் மற்றும் பொறுப்பின்மைகள் மீண்டுமொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்வரும் ஆண்டுகளிலாவது எமது மக்கள் இப் பெருந்தொற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் இந் திருநாளைக் கொண்டாட இறைவனை வேண்டி உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன். – என மேலும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...