16 2
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த தேசபந்து – 5 வீடுகளில் சுற்றிவளைப்பு

Share

பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த தேசபந்து – 5 வீடுகளில் சுற்றிவளைப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாக கூறப்படும் 5 வீடுகளை குற்றப் புலனாய்வு பிரிவு சுற்றிவளைத்துள்ளனர்.

சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற நிலையில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் மூன்று வீடுகளும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை, வெலிகம, பெலேன பகுதியில் உள்ள W15 என்ற சுற்றுலா ஹோட்டலில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதற்கு பழிவாங்கும் வகையில் வெலிகம பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ஆறு அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளைத் தொடங்கியது.

வெலிகம W15 ஹோட்டல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகனான முகமது இஷாம் ஜமால்தீனுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...