11 39
இலங்கைசெய்திகள்

அநுர மிதிபலகையிலா பயணம் செய்தார்: கேள்வி எழுப்பிய திலித் ஜெயவீர

Share

நாடாளுமன்றத்தில் இன்று (27) வெளியிடப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர (Dilith Jayaweera) சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன் அந்த புள்ளிவிபரங்கள் நடைமுறைக்கு மாறானவை என்றும் அவர் கூறியுள்ளார் .

ஜனாதிபதிகளின் வெளிநாட்டு செலவீனங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், ஜனாதிபதி பயணச் செலவுகளில் கூர்மையான வீழ்ச்சியைக் காட்டும் வகையில், ஜனாதிபதி அநுர வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு பயணம் செய்ய முடிந்தது என்று வினவினார்.

வெளிநாட்டு பயணச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்று தமக்கு தெரியவில்லை.

அவர் மிதி பலகையில் பயணம் செய்தாலும் கூட, இந்த குறைந்த செலவில் அவரால் பயணம் மேற்கொண்டிருக்க முடியாது என திலித் ஜெயவீர குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து மாதங்களாக பதவியில் இருக்கும், ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார்.

இந்த நிலையில் செலவுகளைக் குறைப்பது மட்டும் இலாபத்தை ஈட்டாது என்று குறிப்பிட்ட ஜெயவீர, வருமானம் ஈட்டுவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாதீட்டு பற்றாக்குறையை எவ்வாறு சமன் செய்வது, நமது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவோம் என்பன தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....