6 40
இலங்கைசெய்திகள்

தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி – துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

Share

தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி – துண்டிக்கப்பட்ட போக்குவரத்து\

கடுகதி தொடருந்தில் யானைக் கூட்டம் மோதியதால் மட்டக்களப்பு (Batticaloa) மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து கல்ஓயா பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது

இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் தொடருந்து தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி தொடருந்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தடம் புரண்ட தொடருந்தின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...