6 40
இலங்கைசெய்திகள்

தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி – துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

Share

தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி – துண்டிக்கப்பட்ட போக்குவரத்து\

கடுகதி தொடருந்தில் யானைக் கூட்டம் மோதியதால் மட்டக்களப்பு (Batticaloa) மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து கல்ஓயா பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது

இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் தொடருந்து தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி தொடருந்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தடம் புரண்ட தொடருந்தின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...