5 18
இலங்கைசெய்திகள்

கெஹலிய வீட்டு முன்வைக்கப்பட்ட மலர்வளையம்: பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

Share

கெஹலிய வீட்டு முன்வைக்கப்பட்ட மலர்வளையம்: பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு முன்பு மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியைப் பார்வையிட்ட பின்னர், வழக்கைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பொலிஸாரால் தீர்மானிக்க முடியும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...