கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 74 பேர் கொவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும், வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும், மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 833 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment