12 38
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

Share

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்(foreign employment bureau) பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு நாடு திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சிறப்பு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளி வசிக்கும் பகுதியில் உள்ள இலங்கை(sri lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை அலுவலகம், ஒரு மாணவருக்கு சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான வவுச்சரை வழங்கும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விவரங்களை பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அலுவலரிடமிருந்து பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் இரண்டு வழிமுறைகள் மூலம் வழங்கப்படும், 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை அரசுப் பாடசாலைகளில் படிக்கும் பெற்றோர் தற்போது வெளிநாட்டில் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும், 5 வருடங்களுக்கும் குறையாமல் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...