20 17
இந்தியாஉலகம்செய்திகள்

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

Share

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்ற பெண் ஒருவர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா பொங்கல் சேலையை அணிந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்” என்று கூறியிருந்தார்.

இவரின் பதிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...