15 18
உலகம்செய்திகள்

ரஷ்யா அருகே நீரில் நிற்கும் 65 எண்ணெய் டேங்கர்கள்! அமெரிக்க தடையால் பாதிப்பா? வெளியான தகவல்

Share

ரஷ்யா அருகே நீரில் நிற்கும் 65 எண்ணெய் டேங்கர்கள்! அமெரிக்க தடையால் பாதிப்பா? வெளியான தகவல்

ரஷ்யாவிற்கு அருகில் சிங்கப்பூரின் கடற்கரைக்கு வெளியே மற்றும் சீன துறைமுகங்களுக்கு அருகில் டசன் கணக்கிலான எண்ணெய் டேங்கர்கள் நீரில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா கடந்த வாரம் ரஷ்யாவின் வருவாயை குறைக்க, ரஷ்யாவால் மேற்கத்திய எண்ணெய் விலை வரம்புகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 183 “Shadow fleet” கப்பல்களை குறிவைத்து தடைகளை விதித்தது.

இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் டசன் கணக்கான டேங்கர்கள் செயலற்ற நிலையில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

அதிலும், ரஷ்யாவிற்கு அருகில் சிங்கப்பூரின் கடற்கரைக்கு வெளியே மற்றும் சீன துறைமுகங்களுக்கு அருகில், குறைந்தது 65 எண்ணெய் டேங்கர்கள் நீரில் நின்று கொண்டிருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தியா மற்றும் சீனா ரஷ்யா அல்லாத மூலங்களில் இருந்து இறக்குமதியை அதிகரிப்பதால், அனுமதி பெற டேங்கர் கப்பல்கள் இந்த இடைவெளியை நிரப்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

2023ஆம் ஆண்டில், ரஷ்யா குறைந்தது 600 நிழல் கடற்படை டேங்கர்களை இயக்குவதாக நம்பப்பட்டது.

ஆனால், அமெரிக்காவின் புதிய தடைகளால் உலகளாவிய எண்ணெய் டேங்கர்கள் கடற்படையில் சுமார் 10 சதவீதம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...