President Gotabaya Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!- ஜனாதிபதி உறுதி

Share

காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக குறித்த சந்திப்பு தொடர்பான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற அமைச்சருடனான சந்திப்பின்போது, காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது உறவுகள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவுகள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தேர்வுகளை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...