President Gotabaya Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!- ஜனாதிபதி உறுதி

Share

காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக குறித்த சந்திப்பு தொடர்பான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற அமைச்சருடனான சந்திப்பின்போது, காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது உறவுகள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவுகள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தேர்வுகளை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...