16 7
இலங்கைசெய்திகள்

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

Share

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) – கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் (18.12.2024) தினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன், பூட்சிற்றி முகாமையாளர்களிற்கு எதிராக நேற்றையதினம் (06.01.2024) வழக்கு தாக்கல் செய்தார்.

மேலும், வழக்கினை அன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் முகாமையாளர்களிற்கு 60,000/=, 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன் கடுமையான எச்சரிக்கையையும் வழங்கியுளடளார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...