WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கவில்லை! – தயாசிறி ஜயசேகர

Share

” நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ‘மக்கள் சபை’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“எதற்காக இந்த அவசர கூட்டம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலர் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர். ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசை உருவாக்கவோ நாம் அணி திரளவில்லை. மாறாக மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாப்பதற்காகவே சமராடுகின்றோம்.

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பது திரைசேரி செயலாளரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அதற்கான திருத்தங்களை முன்வைப்போம். பழைய முறையில் செல்வதற்கு அனுமதிக்கமாட்டோம்.

தேசிய முக்கியத்துவம்மிக்க வளங்கள் அரசு வசம் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...