WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கவில்லை! – தயாசிறி ஜயசேகர

Share

” நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ‘மக்கள் சபை’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“எதற்காக இந்த அவசர கூட்டம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலர் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர். ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசை உருவாக்கவோ நாம் அணி திரளவில்லை. மாறாக மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாப்பதற்காகவே சமராடுகின்றோம்.

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பது திரைசேரி செயலாளரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அதற்கான திருத்தங்களை முன்வைப்போம். பழைய முறையில் செல்வதற்கு அனுமதிக்கமாட்டோம்.

தேசிய முக்கியத்துவம்மிக்க வளங்கள் அரசு வசம் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...