6 7
இலங்கைசெய்திகள்

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையாக சுமார் 30 பில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abeyrathna) தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 600,000 ஓய்வூதியதாரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 1992 முதல் சில ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நிலுவையில் உள்ள ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையை துரிதமாக வழங்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுடன் (Ministry of Finance) கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு, ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...