IMG 9705
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சண்டிலிப்பாயில் 9 குடும்பங்கள் பாதிப்பு!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்  உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே – 141 மற்றும் ஜே – 142  ஆகிய கிராம சேவகர் பிரிவு  பகுதிகளிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...