gotta
செய்திகள்அரசியல்இலங்கை

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – பங்காளிக் கட்சியும் எதிர்ப்பு

Share

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கற்றாராய்ந்து, அதற்கான சட்டவரைபை தயாரிப்பதற்காகவும், இது விடயம் தொடர்பில் நிதி அமைச்சால் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள
சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களை கற்றாராய்ந்து அவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதற்கான
முன்மொழிகளை முன்வைப்பதற்காகவுமே குறித்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

13 பேரடங்கிய இந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி செயலணியானது மாதம் ஒரு முறை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.

13 பேரடங்கிய இந்த செயலணிக்கு முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டுள்ளபோதிலும் தமிழர் எவரும் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....