9 26
இலங்கைசெய்திகள்

மிரிகானாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

Share

மிரிகானாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றையதினம் (21) மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.

இவர்களை நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார்.

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன இதன் பின்னர் படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைதினம் (21) இவர்கள் மிரிகான எனும் இடத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும் காவல்துறையினரும் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மியன்மாரில் (Myanmar) இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த படகு நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது

இந்நிலையில், இன்று (20.12/2024) காலை திருகோணமலை (Trincomalee) துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டன.

பின்னராக மருத்துவ பரிசோதனைகளுக்காக படகிலிருந்து பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர், சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக 110 நபர்கள் மூன்று படகுகளில் தமது நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அதன்போது கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இரு படகுகள் விபத்திற்குள்ளானதாகவும் குறித்த அனர்தத்தில் சிறுவர்கள் உட்பட 6 நபர்கள் மரணமடைந்திருப்பதுடன் எஞ்சிய அனைவரும் குறித்த படகில் ஏறி உயிர்தப்பியதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இவர்களுக்கான ஆரம்பநிலை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் நீதித்துறையின் கட்டமைப்புக்களுக்கு இணங்க அவர்களுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதன்போது தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...

125535987 d1afd603 42be 4dc5 92e7 7796b59074e5.jpg
செய்திகள்உலகம்

கட்டாய ராணுவ சேவை அறிமுகம்: அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக உயர இலக்கு!

நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர்...

MediaFile 12
செய்திகள்இலங்கை

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – சவப்பெட்டி ஊர்வலம்!

பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,...