sementhu
செய்திகள்அரசியல்இலங்கை

சிமெந்துத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் இதுதான்!-

Share

சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சிமெந்து இறக்குமதியில் இருந்து நிறுவனங்கள் பின்வாங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிமெந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாதாந்தம் கூடுதலாக 10,000 மெற்றிக் தொன் சிமெந்தை இறக்குமதி செய்ய முடிந்தால் இந்நிலைமையைத் தவிர்க்க முடியும் எனவும் சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் சிமெந்துத் தேவையில் 60 வீதம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 40 வீதம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் சிமெந்து உற்பத்தி மாதமொன்றுக்கு 150,000 மெற்றிக் தொன்னை தாண்டுவதாகக் கூறிய அவர், பாரிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிமெந்தை பதுக்குவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் மூலம் 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடை ஒன்றின் விலையை அரசாங்கம் அண்மையில் 93 ரூபாவினால் உயர்த்திய போதிலும், தற்போது கடுமையான சிமெந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...