sementhu
செய்திகள்அரசியல்இலங்கை

சிமெந்துத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் இதுதான்!-

Share

சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சிமெந்து இறக்குமதியில் இருந்து நிறுவனங்கள் பின்வாங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிமெந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாதாந்தம் கூடுதலாக 10,000 மெற்றிக் தொன் சிமெந்தை இறக்குமதி செய்ய முடிந்தால் இந்நிலைமையைத் தவிர்க்க முடியும் எனவும் சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் சிமெந்துத் தேவையில் 60 வீதம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 40 வீதம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் சிமெந்து உற்பத்தி மாதமொன்றுக்கு 150,000 மெற்றிக் தொன்னை தாண்டுவதாகக் கூறிய அவர், பாரிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிமெந்தை பதுக்குவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் மூலம் 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடை ஒன்றின் விலையை அரசாங்கம் அண்மையில் 93 ரூபாவினால் உயர்த்திய போதிலும், தற்போது கடுமையான சிமெந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...