19 18
இலங்கைசெய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேய் மரணம் : தொடரும் விசாரணை

Share

மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேய் மரணம் : தொடரும் விசாரண

மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது இறந்த பெண்ணின் கணவரிடம் மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் அவருடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டு அவற்றை நெறிப்படுத்தப்பட்டது.

அதேநேரம் சம்பவத்தின் போது கடமையில் இருந்த இரு தாதிய உத்தியோகத்தர்களையும் விசாரித்து அவர்களின் சாட்சியங்களையும் நெறிப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாமையினால் குறித்த அறிக்கையை விரைந்து பெறுவதற்கான நினைவூட்டல் கடிதத்தை அனுப்பி உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு மரணித் தாயின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 20ம் திகதி தவணையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரசவத்தின் போது மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...