17 14
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு பொட்டாசியம் குளோரைட் உரம் வழங்கியுள்ள ரஷ்யா

Share

இலங்கைக்கு பொட்டாசியம் குளோரைட் உரம் வழங்கியுள்ள ரஷ்யா

உலக உணவு திட்டத்தின் கீழ் ரஷ்யா(Russia), இலங்கைக்கு(Sri lanka) 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால், கொழும்பு துறைமுகத்தில் வைத்து இலங்கையின் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.

ரஷ்யாவின் Uralchem ​​குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் உரமானது, இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்டுள்ளது என கொழும்பில் உள்ள Russia தெரிவித்துள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்றைய தினம் கையளிக்கப்பட்ட 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம், ஓ.பி உரம்) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று குறித்த உரம் கொண்டு வரப்பட்டது.

உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...