1 1 5
இலங்கைசெய்திகள்

3 நாட்களில் புஷ்பா 2 செய்துள்ள இமாலய வசூல்.. மாபெரும் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

3 நாட்களில் புஷ்பா 2 செய்துள்ள இமாலய வசூல்.. மாபெரும் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து வசூல் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்பது, தற்போது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் மூன்று நாட்களில் புஷ்பா 2 திரைப்படம், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 621 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். அடுத்த வாரம் இப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துவிடும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...