3 7
இலங்கைசெய்திகள்

கோபா குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா – சஜித்தால் தொடரும் இழுபறி

Share

கோபா குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா – சஜித்தால் தொடரும் இழுபறி

கோபா (COPA) குழுவின் தலைமைப் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நியமிக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் கோபா குழுவின் தலைமைப் பதவியை எதிரணிக்கு வழங்குவதற்கு அநுர அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா (COPA) குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தில் கோபா குழுவின் தலைமைப் பதவியை ஹர்ஷ டி சில்வாவை ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், எரான் விக்கிரமரத்னவை தேசியப் பட்டியல் ஊடாக சபைக்குக் கொண்டு வந்து, அவரை கோபா தலைவராக்குவதற்குரிய பரிசீலனைகளும் இடம்பெறுவதாகத் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் மனக் கசப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...