11 5
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

Share

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...