19 5
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசாங்கத்தால் வரிசையில் வந்து வரி செலுத்தும் மக்கள்

Share

அநுரவின் அரசாங்கத்தால் வரிசையில் வந்து வரி செலுத்தும் மக்கள்

நீண்ட வரிசையில் செப்டெம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் வரி செலுத்த முன்வந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் நிகழ்நிலை செயலியிலும் பலர் வரி செலுத்துவதற்கு உள்நுழைய முயல்வதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது பெரும் பலம் எனவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த நிலையில், செப்டம்பர் 15 முதல் 30 வரை வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கவுன்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், “தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே இங்கு பிரச்சினை” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...