7 52
இலங்கைசெய்திகள்

பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Share

தனது வாழ்க்கையில் முதல் முறையாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பான விசாரணைக்கு இன்று(28.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி கடந்த சில நாட்களாக, கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல அமைச்சரவை அமைச்சர்கள், வாக்குமூலங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...