Shasheendra Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

‘தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்ச குடும்பம்’

Share

” நாளை தேர்தலொன்று நடத்தப்பட்டால் நாம் தோல்வியடைவது உறுதி.” – என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச.

பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டார்.

” நாட்டு மக்களின் நலன் கருதியே இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்தார். ‘வாக்கு வங்கி அரசியல்’ அவருக்கு முக்கியமில்லை.

நாட்டின் நலனே முக்கியம். அதனால்தான் எதிர்ப்புகள் வலுத்தாலும் இப்படியொரு முடிவை எடுத்தார். எமது இந்த முடிவு மாறாது, முன்னோக்கி பயணிப்போம். அரசியலுக்காக, மக்கள் நஞ்சு உண்பதை அனுமதிக்கமுடியாது. ” – என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...