4 46
இலங்கைசெய்திகள்

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

Share

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையின்(sri lanka) 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(archuna) தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நகர மறுத்துவிட்டார், அதே நேரத்தில் அவர் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்த சம்பவத்தினால் தாம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“நாடாளுமன்ற ஆசனத்தில் நடந்த சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லை. ஊடகங்கள் 45-50 நிமிட பேட்டி எடுத்தன. நான் சாப்பிட்டுவிட்டேனா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு நான் ஆம் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் நான் விடுதலைப் புலிகளின் அங்கமா என்று கேள்வி எழுப்பினர் அதற்கு நான் இல்லை என்று பதிலளித்தேன்.

ஆனால், இரண்டாவது கேள்விக்கு எனது பதிலைத் தவிர்த்துவிட்டனர், என்னால் தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்

நிலைமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்படும் தேவையான பாதுகாப்பை எவ்வாறு மற்றும் எப்போது ஏற்பாடு செய்ய முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...