ஏனையவை

தேர்தல் முடிவுக்கு பின்னர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து

Share
7 35
Share

தேர்தல் முடிவுக்கு பின்னர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆட்சி அமைக்கும் அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் (18) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாது,

“நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இன்று இருந்த ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது. இதையிட்டு நான் மன வருத்தம் அடைகின்றேன். எனினும், கொழும்பு தலைநகர் மாவட்டத்தில் இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களைத் தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாகவும் அதிகரித்துக் கொண்ட, சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் உடன் பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

அடித்துள்ள அரசியல் அலையின் மத்தியிலும் மக்கள், எமது வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 123 விருப்பு வாக்குகளை எமது வாக்காளர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு விசேட நன்றிகள். என்றார்.

 

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...