15 9
ஏனையவை

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

Share

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி ஹலேவி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லா எனும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய குழு, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருவதுடன், இஸ்ரேலும் பதிலுக்கு லெபனானில் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லாவானது, ஹமாஸ் போன்ற சிறிய குழுவில்லை, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் இது மிகப்பெரிய குழுவாகும்.

தற்போது இஸ்ரேல் இந்த குழுவை குறி வைத்து போரை நீடித்து வருவதுடன், கடந்த மூன்று மாதங்களாக லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3,300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...