10 3
ஏனையவை

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

Share

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

தாய்லாந்து, இந்தியப் பயணிகளுக்கான வீசா இல்லாத நுழைவு திட்டத்தை (Visa-Free Entry) காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை (TAT) உறுதிபடுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்திய பயணிகள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெறுகின்றனர்.

மேலும், 30 நாட்கள் கூடுதலாக தங்க உள்ளூர் குடியுரிமை அலுவலகத்திடம் அனுமதி பெறலாம்.

இதன்மூலம், இந்திய பயணிகள் விசா விண்ணப்ப நெருக்கடிகள் இன்றி தாய்லாந்திற்கு செல்ல முடியும், இதனால் பயண அனுமதிகள் தொடர்பான சிக்கல்களை தவிர்க்கலாம்.

2022 நவம்பர் 10ல் அறிமுகமான இந்த Visa-Free Entry திட்டம் முதலில் 2023 மே 10 வரை மட்டுமே அமுலில் இருந்தது. பின்னர் தற்காலிகமாக 2023 மே 11 முதல் நவம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால், இப்போது இத்திட்டத்தை காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை (TAT) தெரிவித்துள்ளது.
விசா இல்லாத பயணம் என்பது பயணிகள் எந்தவொரு விசாவும் பெறாமல் அல்லது வருகை நேரத்தில் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதைக் குறிக்கிறது.

பயணத்திற்கான செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால் அவர்கள் சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை சோதனை காப்பகத்தில் காட்டினால் போதும்.

இந்திய பயணிகளுக்கு தாய்லாந்து முக்கிய விசா இல்லாத பயண இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

2024 முதல் மூன்று மாதங்களில் தாய்லாந்து 9.4 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்றுள்ளது. இதனால் அதன் பொருளாதாரத்திற்கு 454.6 பில்லியன் பாட் ($12.4 பில்லியன்) வருவாய் கிடைத்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024-ல் மொத்தம் 40 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்கான இலக்குடன் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. இதுவரை 1.64 மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...