2 14
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை

Share

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று (9) தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் சேறு பூசி தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமெனில் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு கோருவதாக தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் புதிய நாடாளுமன்றத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம்.தனது கொள்கை என்ன என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு தெரிவிக்கவேண்டிய கடமை உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்ன்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான(imf) உடன்படிக்கையை திசைகாட்டி நிராகரித்தது.ஆனால் தற்போது அந்த உடன்படிக்கையை செயற்படுத்துவது குறித்து ஐ எம் எவ் உடன் கலந்துரையாடி வருகிறது.

இந்த உடன்படிக்கையில் ஏதாவது திருத்தம் உள்ளதா என்பது எமக்கு தெரியாது. எனவே ஐஎம் எவ் உடனான உடன்படிக்கை,அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...