3 14
இலங்கைசெய்திகள்

திருடன் என்ற பட்டத்துடன் சாகப் போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை

Share

திருடன் என்ற பட்டத்துடன் சாகப் போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தை கூட தான் பெற்றுக் கொள்ளவில்லை என தன்னிடம் தெரிவித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sajara kariyawasam) தெரிவித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக உழைத்த போதிலும் இன்று நாட்டு மக்களிடம் இருந்து திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விரைவாக அதனை நீக்குவோம் என்று கூறிய போது, ​​தான் அவ்வளவு காலம் வாழ்வேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரம் பெறுவதற்காக, எந்தத் தவறும் செய்யாத ஒரு மனிதனின் பண்பைக் கொன்று பிணங்களை குவிப்பதை விட பாவம் வேறொன்றுமில்லை என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....

pujitha 1
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு , உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு...