1 15
இலங்கைசெய்திகள்

நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

Share

நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவோ அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவுவதற்கோ நாங்கள் அதிகாரத்திற்கு வரவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மாலம்பே – அரங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான நாடாளுமன்றம் தேவை என தெரிவித்த பிரதமர், ஒரு பணக்கார நாடு அழகான வாழ்க்கையை உருவாக்க வேண்டுமானால், அதைச் செயல்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் தேவை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும், ஒரு சில திருடர்களை வைத்து பணக்கார நாட்டை உருவாக்க முடியுமா என கேள்வி எழுப்பிய பிரதமர், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் தாம் பெரும் பங்காற்றியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முடங்கிக் கிடந்த பல திட்டங்களைத் மீண்டும் தொடங்க முடிந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...