2 13
இலங்கைசெய்திகள்

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

Share

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை பார்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் காலி (Galle) மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள திசைக்காட்டி குழுவானது, நாட்டில் இடதுசாரி இயக்கத்தை நிரந்தரமாக அழித்தொழிக்கும் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ நீங்கள் பொருளாதாரத்தில் சிக்கித் தவித்த போது உங்களை விடுவித்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

உலகின் சக்தி வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவடைந்தது, டொனால்ட் ட்ரம்பிற்கு 78 வயதாகிறது.

எங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாட்டைப் பன்னிரண்டு வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.நமது சிந்தனைகளை விடவும் அவருது சிந்தனை சிறந்தது.

வங்குரோத்து நாடு மிகவும் சிரமப்பட்டு இரண்டு வருடங்களில் விடுவிக்கப்பட்டது எமது அரசாங்கம் உருவாக்கிய பாதையில் இருந்து இவர்கள் வெளியேறினால் மீண்டும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருக்கும்.” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...