1 13
இலங்கைசெய்திகள்

பொதுத்தேர்தலை குறி வைத்து கொழும்பில் பெருந்தொகையான வேட்பாளர்கள்

Share

பொதுத்தேர்தலை குறி வைத்து கொழும்பில் பெருந்தொகையான வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிகளவான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 966 பேர் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 567 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களைச் சேர்ந்த 399 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,765,351 ஆகும்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 19 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 902 பேர் போட்டியிடுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 528 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 374 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,881,129 ஆகும். பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....