2 13
இலங்கைசெய்திகள்

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

Share

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை பார்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் காலி (Galle) மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள திசைக்காட்டி குழுவானது, நாட்டில் இடதுசாரி இயக்கத்தை நிரந்தரமாக அழித்தொழிக்கும் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ நீங்கள் பொருளாதாரத்தில் சிக்கித் தவித்த போது உங்களை விடுவித்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

உலகின் சக்தி வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவடைந்தது, டொனால்ட் ட்ரம்பிற்கு 78 வயதாகிறது.

எங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாட்டைப் பன்னிரண்டு வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.நமது சிந்தனைகளை விடவும் அவருது சிந்தனை சிறந்தது.

வங்குரோத்து நாடு மிகவும் சிரமப்பட்டு இரண்டு வருடங்களில் விடுவிக்கப்பட்டது எமது அரசாங்கம் உருவாக்கிய பாதையில் இருந்து இவர்கள் வெளியேறினால் மீண்டும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருக்கும்.” என்றார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...